search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சபரிமலை சீசன்"

    • கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன.
    • திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    கன்னியாகுமரி:

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். சூரிய உதயம், சூரிய அஸ்தமனம், முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதிகளை பார்வையிடும் அவர்கள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்கு மிகுந்த ஆர்வம் கொள்கின்றனர்.

    விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்ப்பதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் குகன், தாமிரபரணி, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. படகில் பயணம் செய்ய சாதாரண கட்டணம் ரூ.75 வீதமும், சிறப்பு கட்டணம் ரூ.300 வீதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

    கன்னியாகுமரியை பொறுத்தவரை 2 சீசன் காலங்கள் உள்ளன. கோடை விடுமுறை மற்றும் நவம்பர், டிசம்பர் மாதங்களான சபரிமலை சீசன் எனப்படும் சீசன் காலங்கள் ஆகும். கன்னியாகுமரியில் தற்போது இந்த சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களால் களை கட்டியுள்ளது.

    கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை 1 லட்சத்து 90 ஆயிரத்து 200 பேர் பார்த்து ரசித்து உள்ளதாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் போன்ற தொடர் விடுமுறை நாட்கள் காரணமாக வரும் நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். திருவள்ளுவர் சிலையில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால் அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

    • தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.
    • நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

    தேனி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரஜோதி, மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து அய்யப்பன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் தேனி மாவட்டம் வழியாக செல்கின்றனர்.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இதனை தவிர்க்கும் விதமாக நாளை முதல் ஒருவழிப்பாதை அமல்படுத்த தேனி மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    சபரிமலை அய்யப்பன் ேகாவிலில் நடைபெறும் மண்டல பூஜையையொட்டி தேனி மாவட்டம் வழியாக சபரிமலைக்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு, காலதாமதத்தை தவிர்க்கும் வகையில் நாளை (20ந் தேதி) முதல் சபரிமலையில் மகரஜோதி தரிசன தினம் வரை தேனி மாவட்டம் வழியாக செல்லும் வாகனங்களுக்கு ஒருவழிப்பாதை அமல்படுத்தப்படுகிறது.

    அதன்படி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வாகனங்கள் கம்பம், கம்பம் மெட்டு வழியாக சபரிமலைக்கு செல்ல வேண்டும். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் வாகனங்கள் குமுளி, கூடலூர், கம்பம் வழியாக செல்லும்மாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு பலகை கம்பத்தில் போலீசார் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் வாகனங்கள் அதன்படி சென்று வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் சூட்கேஸ், கைப்பை கொண்டு செல்ல தடை
    • மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இந்த கோவில் நடை பக்தர்களின் தரிசனத்துக்காக தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படுவது வழக்கம். அதேபோல மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு நடை அடைக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் நேற்று முதல் தொடங்கி உள்ளது.

    இதையடுத்து நேற்று முதல் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நடை திறப்பு நேரம் கூடுத லாக 1 மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி பகல் 12.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 1 மணிக்கு அடைக்கப்படுகிறது. இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படும் நடை 9 மணிக்கு அடைக்கப் படுகிறது.  சபரிமலை சீசன் தொடங்கிய நேற்று முதலே கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் நிரம்பி வழிகிறது. சீசன் தொடங்கிய 2-வது நாளான இன்றும் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

    இதனால் பகவதி அம்மன் கோவில் வெளி பிரகா ரத்தில் உள்ள கியூ செட்டில் பக்தர்களின் நீண்ட "கியூ" காணப்பட்டது. பக்தர்கள் சுமார் 1 மணி நேரம் "கியூ" வில் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்லும் பக்தர்கள் "சூட்கேஸ்", கைப்பை மற்றும் பெட்டிகள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் கடுமையான சோதனை செய்த பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் தரிசனத்துக்கு செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள். இதேபோல கன்னியாகுமரியில் உள்ள திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவில், சுசீந்திரம் தாணு மாலயன் சுவாமி கோவில், நாகர்கோவில் நாகராஜா கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் போன்ற கோவில்களிலும் அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது.

    மேலும் விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்ப்ப தற்காக படகு துறையில் அய்யயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இது தவிர கன்னியாகுமரியில் உள்ள சுற்றுலா தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், அரசு அருங்காட்சியகம், மியூசியம், மீன்காட்சி சாலை உள்பட அனைத்து இடங்களி லும் அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதனால் கன்னியாகுமரியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பா டும் செய்யப்பட்டுள்ளது. சிப்ட் முறையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • நடைபாதைகளில் அலங்கார தரை கற்கள் பதிக்கப்படுகிறது
    • ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்கு வருடம் முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி சபரிமலைக்கு செல்லும் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிக அளவில் காணப்படும். இதனால் இந்த 3 மாத காலமும் இங்கு சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த சீசன் தான் கன்னியாகு மரியில் மெயின் சீசன் ஆகும். இந்த சீசன் காலம் சபரிமலை சீசன் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலங்களில் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் பேர் வரை கன்னியா குமரிக்கு வந்து செல்வா ர்கள்.

    இந்த ஆண்டு சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந் தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசனையொட்டி கன்னியாகுமரி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் சுகாதா ரம், குடிநீர், மின்விளக்கு, கழிப்பிடம், கார் பார்க்கிங், சாலை வசதி உள்பட பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

    கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணி களை கவரும் வகையில் அழகுப்படுத்தும் பணி நடக்கிறது. முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கட ற்கரை பகுதியில் மணல் பரப்பே தெரியாத அளவில் நடைபாதைகளில் பல வண்ண அலங்கார தரை கற்கள் பதிக்கும்பணி தொ டங்கி நடைபெற்று வருகிறது.

    ராட்சத பொக்லைன் எந்திரம் மூலம் தரைப்பகுதி சமபடுத்தப்பட்டு அலங்கார தரை கற்கள் பதிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கிறது.

    • சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது
    • விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவே கானந்தர் நினைவு மண்ட பமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறை யில் 133 அடி உயர திரு வள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயி ரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வரு கிறார்கள்.

    இந்தநிலையில் திரு வள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 4 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்கு வரத்து இயக்கப்பட்ட வில்லை. விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவே கானந்தா ஆகிய 3 படகு களில் குகன் படகு பழுத டைந்த நிலையில் இருந்த தால் கடந்த மாதம் அதனை சின்ன முட்டம் துறை முகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீர மைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகும் சீரமைப்பு பணி முடிந்து கடந்த மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதற்கிடையில் சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்கு கிறது. இதைத்தொடர்ந்து விவேகானந்தா என்ற மற்றொரு சுற்றுலா பட கையும் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்கு வரத்துக்க ழகம் முடிவு செய்தது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தா என்ற சுற்றுலா படகு கன்னியா குமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுத்துறையில் இருந்து கடல்வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு இன்று காலை கொண்டு செல்லப் பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீர மைக்கும் பணி தொடங்கி உள்ளது.

    இந்த படகு பராமரிக்கும் பணி முடிவடைவதற்கு இன்னும் ஒருவாரகாலம் ஆகலாம் என்று தெரிகிறது. இந்த படகு பராமரிப்பு பணி முடிவடைந்த பிறகு படகு புதுப்பொலிவுடன் கடலில் இறக்கப்பட்டு வெள்ளோட்டம் விடப்படும். அதன்பிறகு சபரிமலை சீசனையொட்டி அடுத்த வாரம் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி செல்ல பயன்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

    • சபரிமலை சீசனில் சுற்றுலா பயணிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமா?
    • திருவள்ளுவர் சிலைக்கு 6 மாதங்களாக படகு போக்குவரத்து இயக்கப்படவில்லை

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாட்டில் இருந்தும் ஆண்டுக்கு 75 லட்சம் சுற்றுலா பணிகள் வருகை தருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடல் நடுவில் அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்வையிடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்கு வரத்து கழகம் மூலம் பொதி கை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப் பட்டு வருகிறது. இயற்கை யாகவே விவேகானந்தர் நினைவு மண்டப படகு தளத்தில் ஆழம் அதிகமாக உள்ளது. ஆனால் திருவள்ளு வர் சிலை படகு தளத்தில் ஆழம் குறைவாகவும், படகு நிறுத்தும் இடத்தில் அதிகப் படியான பாறைகளும் உள்ளது. இதனால் கடலில் நீரோட்டம் குறைவான காலங்களில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்படும் படகு போக்கு வரத்து திருவள்ளுவர் சிலைக்கு மட்டும் இயக்கப்ப டுவதில்லை.

    இதன் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலைக்கு செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் விவே கானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு பல ஆண்டுகளாக சுற்றுலா பயணிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தன. இதைத்தொடர்ந்து விவேகா னந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி கூண்டு பாலம் அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் பயனாக ரூ.37 கோடி செலவில் கண்ணாடி கூண்டு பாலம் அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் தொடங்கியது.

    இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும் 4 மீட்டர் அகலமும் கொண்ட தாக அமைக்கப்படுகிறது. இந்த பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும்போது தாங்கள் நடந்து செல்லும் பாதையின் கீழே கடல்அலையை ரசிக் கும் வண்ணமாக வெளி நாடுகளில் அமைக்கப்பட் டுள்ளது போல இந்த கண்ணாடி கூண்டுபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த பாலத்துக்கான கட்டு மான பணிகள் திருவள்ளுவர் சிலை அமைந்துள்ள பாறை யில் மட்டும் மந்தமாக நடந்து வருகிறது. இந்த பணி தொடங்கி 6 மாதங்கள் ஆன பிறகும் திருவள்ளுவர் சிலையில் இணைப்பு பாலத்துக்கான தொடக்க நிலையிலேயே இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதன் மறுபுறம் அமைந் துள்ள விவேகானந்தர் பாறையில் இந்த இணைப்பு பாலத்துக்கான எந்தவித பணிகளும் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை. இந்த பால பணியினால் கடந்த 6 மாத காலமாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து நடக்கவில்லை. இதனால் சுற்றுலா பயணிகள் திருவள் ளுவர் சிலையை பார்க்க முடியாமல் தொடர்ந்து கடந்த 6 மாத காலமாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற வண்ணமாக உள்ளனர். சமீபத்தில் தான் திருவள்ளுவர் சிலையில் ரசாயன கலவை பூசுவ தற்காக 7 மாத காலமாக படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது.

    இந்த ரசாயன கலவை பூசும் பணி முடிந்த பிறகு ஒரு சில மாதங்கள் மட்டுமே திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக் கப்பட்டு வந்தது. இதற்கிடை யில் இந்த பாலப்பணியும் உடனடியாக தொடங்கி யதால் சுற்றுலா பயணிகள் தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை படகில் சென்று நேரடியாக பார்க்க முடியா மல் ஏமாற்றம் அடைந்துள் ளனர்.

    இந்த நிலையில் கன்னியா குமரியில் மெயின் சீசன் காலமான சபரிமலை சீசன் வருகிற 17-ந்தேதி தொடங்கு கிறது. இந்த சீசன் ஜனவரி மாதம் 20-ந்தேதி வரை 65 நாட்கள் நீடிக்கிறது. இந்த சீசன் காலங்களில் லட்சக்க ணக்கான அய்யப்ப பக்தர்க ளும், சுற்றுலா பயணிகளும் கன்னியாகுமரிக்கு வரு வார்கள்.

    எனவே இந்த இணைப்பு பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து வருகிற சபரிமலை சீசன் காலம் முடிவதற்குள் பயன்பாட் டுக்கு கொண்டுவர வேண் டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் தமிழ் ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவேகானந்தர் மண்டபத்தை 7 லட்சம் பேர் மட்டுமே பார்வையிட்டுள்ளனர்
    • சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரியில் சபரிமலை சீசனான நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் லட்சக் கணக்கான அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சபரிமலை சீசன் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிவடைந்தது.

    இந்த சீசன் முடிவடைந்ததை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள்குறைந்த வண்ணமாக உள்ளன. இருப்பினும் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்கரை பகுதியில் அதிகாலையில் சூரியன் உதயமான காட்சியை காண சுற்றுலாபயணிகள் குவிந்தனர்.

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மற்றும் திருப்பதி வெங்கடேஷ்வர பெருமாள் கோவிலில் தரிசனத்துக்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகா னந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 8 மணியில் இருந்தே சுற்றுலா பயணி கள் படகுத்து றையில் நீண்ட கியூவில் காத்திருந்தனர். திருவள்ளுவர் சிலையில் பராமரிப்பு பணிகள் நடை பெறுவதால் சுற்றுலா பயணிகள் அனு மதிக் கப்பட வில்லை. இத னால் சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை கடற்கரையில் இருந்தவரே பார்வையிட்டு சென்றனர்.

    மேலும் கன்னியாகுமரி யில் உள்ள சுற்றுலாத் தலங்களான காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணி மண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள பேரூராட்சி பொழுது போக்கு பூங்கா, சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி, மியூசியம், அரசு அருங்காட்சி யகம், மீன் காட்சி சாலை, கலங்கரை விளக்கம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக் கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலாத் தலங்களையும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் விடுமுறை இல்லாத இன்றும் சுற்றுலா தலங்கள் களை கட்டியது.

    இந்த சுற்றுலா தலங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. கடற்க ரைப்பகுதியில் சுற்றுலா போலீசாரும் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வந்தனர். சபரிமலை சீசனையொட்டி கடந்த 3 மாதங்களில் 10 லட்சம் சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகை தந்து உள்ளனர்.

    இதில் 7 லட்சம் 17ஆயிரத்து 591 சுற்றுலா பயணிகள் மட்டுமே விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    சபரிமலை சீசனை யொட்டி கடந்த நவம்பர் மாதம் 2 லட்சத்து 9 ஆயிரத்து 891 பேரும் டிசம்பர் மாதம் 2 லட்சத்து 53 ஆயிரம் பேரும் கடந்த ஜனவரி மாதம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 700 பேரும் விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

    ×